நெல்லையப்பர் கோயிலில் ஆனித்தேரோட்ட திருவிழாவையொட்டி பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஆனி மாத 10 நாட்கள் நடைபெறுகின்ற தேரோட்டத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்தாண்டுக்கான ஆனித்தேரோட்டம் ஜூலை 14-ம் தேதி நடைபெறுகிறது. ஆனி விழா வருகிற 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில் நேற்று பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள சின்ன கொடிமரத்தில் பிள்ளையார் கொடி ஏற்றப்பட்டது.
ஜூன் 22-ம் தேதி மூவர் திருவிழா தொடங்குகிறது. ஆனித்தேரோட்டம் ஜூலை 14-ம் தேதி நடைபெறுகிறது.