திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா (மே14) நடைபெறுகிறது.
இது குறித்து செயல் அலுவலர் பா.ரோஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வருஷாபிசேக விழா செவ்வாக்கிழமை நடைபெற உள்ளது.
காலை 10.30 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணிக்கு சுவாமி மற்றும் அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் நகரத்தில் உள்ள நான்கு ரதவீதிகளிலும் பவனி நடைபெற உள்ளது.