நாச்சியார் கோலத்தில் வரதராஜப் பெருமாள் செவ்வாய்க்கிழமை பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில், மூன்றாம் நாளான 19-ஆம் தேதி கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, வரதர் அனுமந்தர், சேஷன், சந்திரப் பிரபை வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலையில் நாச்சியார் திருக்கோலத்தில் வரதர் எழுந்தருளினார். தொடர்ந்து, தங்கப் பல்லக்கில் மாடவீதிகளில் பவனி வந்தார். வழிநெடுகளிலும் திரளான பக்தர்கள் வரதரின் விசேஷ நாச்சியார் கோலத்தைக் கண்டு, பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.