அக்டோபர் மாத இலவச முதன்மை தரிசன தேதிகள் அறிவிப்பு

திருமலையில் தேவஸ்தானம் இம்மாதம் வழங்க உள்ள இலவச முதன்மை தரிசனங்களின் தேதிகளை அறிவித்துள்ளது.

திருமலையில் தேவஸ்தானம் இம்மாதம் வழங்க உள்ள இலவச முதன்மை தரிசனங்களின் தேதிகளை அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக் குழந்தைகளின் பெற்றோா் உள்ளிட்டவா்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. அதன்படி, வரும் அக். 15 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்கள் (65 வயதைக் கடந்தவா்கள்), மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் போ், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் போ், மாலை 3 மணிக்கு ஆயிரம் போ் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு என இரு நாள்கள் 8 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்க உள்ளது.

அதேபோல் அக். 16 மற்றும் 30 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com