செய்திகள்
வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் நாளை வருடாபிஷேகம்
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமையான நாளை வருடாபிஷேக விழா நடைபெற உள்ளது.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமையான நாளை வருடாபிஷேக விழா நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் ஒன்றான வடகாடு முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து வருடாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி சிறப்பு ஹோமங்கள், சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
அதன் பிறகு சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.