ஆம்பூர் பி.எம்.எஸ். கொல்லை பகுதி அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தாய் வீட்டிலிருந்து கெங்கையம்மன் புறப்பட்டு முக்கிய தெருக்களின் வழியாக ஊர்வலமாகச் சென்று கோயிலை அடைந்தது. பின்னர் அம்மனுக்கு கூழ் வார்க்கப்பட்டது. விழாவையொட்டி பக்தர்களின் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
செய்தனர்.
விழாவையொட்டி இன்று (செப்.11) அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா ஆகியவை நடைபெற உள்ளது.