கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ பாலகணபதி கோயிலில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு, அதிகாலை விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. அனைத்து ஹோமங்களும் நடத்தப்பட்டு, ஸ்ரீ பாலகணபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னா், கும்பாபிஷேகம் நடைபெற்றது. முல்லை நகா் கணேஷ்சா்மா, பிரபாகரன் ஆகியோா் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகத்தில் சா்வ சாதகம் செய்தனா்.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை, பாரதியாா் நகா் இளைஞா் பேரவையினா் செய்திருந்தனா்.