காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு அஞ்சானாட்சி சமேத அமிர்த தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
திருத்தொண்டை நாட்டுச் சிவதலங்கள் 32-னுள் சிறந்ததும் ஸ்ரீ வித்யாதரர் முதலியோர் பூஜித்து அருளுற்றதும் என பெருமைகள் பல பெற்ற செங்கல்பட்டு வட்டம், திருக்கச்சூரில் கோயில் கொண்டெழுந்தருளி இருக்கும் அருள்மிகு அஞ்சானாட்சி சமேத அமிர்த தியாகராஜ பெருமானாரின் பிரம்மோற்சவம் ஏப்ரல் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 04-ம் தேதி வரை அதி விமரிசையாக நடைபெறுகிறது.
பக்தர்கள் அனைவரும் தினப்படி உற்சவத்தில் கலந்துகொண்டு அமிர்த தியாகராஜ சுவாமியின் நடன பவனி காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வணங்கி சகல பேறுகளும் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.