திருவடிசூலம் ஸ்ரீகோயில்புரம் ஆதிபரமேஸ்வரி அம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழா வியாழக்கிழமை தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை (ஏப்.19) மாலை கோயிலில் விளக்கு பூஜை, கூட்டுப் பிரார்த்தனை ஆகியவை நடைபெறும். விழா ஏற்பாடுகளை ஆலய நிறுவனர் யோகி மதுரை முத்து சுவாமிகள் செய்து வருகிறார்.