திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வடுவழகி அம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் மரக்கடை தெற்குத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவடுவழகி அம்மன் கோயிலில் 95-ஆம் ஆண்டு உத்ஸவம் நடைபெற்றது. மரக்கடை கிராமமக்கள் ஏற்பாட்டின்படி, செவ்வாய்க்கிழமை கஞ்சி வார்த்தல் நடத்தப்பட்டன. தொடர்ந்து புதன்கிழமை காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வடுவழகி அம்மன் காட்சியளித்தார். தொடர்ந்து, தப்பாட்ட நிகழ்ச்சியுடன் தேரோட்டம் நடைபெற்றது. தேர் மரக்கடை, திருவாரூர் - மன்னார்குடி பிரதான வடக்குத் தெரு, தெற்குத் தெரு உள்ளிட்ட சாலைகள் வழியாக வீதியுலா வந்தது. தேரில் சிறப்பு அலங்காரத்தில் வடுவழகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.