ஆடிப்பெருக்கு: காவிரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடிப்பெருக்கை முன்னிட்டும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து விவசாயம் செழிக்க வேண்டியும், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் உள்ள காவிரி அம்மனுக்கு, சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற
ஆடிப்பெருக்கு: காவிரி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடிப்பெருக்கை முன்னிட்டும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து விவசாயம் செழிக்க வேண்டியும், மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் உள்ள காவிரி அம்மனுக்கு, சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
 மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், காவிரி அம்மனுக்கு சிலை அமைக்கப்பட்டு கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆடிப்பெருக்கை முன்னிட்டும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வந்து, விவசாயம் செழிக்க வேண்டியும், காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகாதீபாராதனை செய்யப்பட்டது. அம்மனுக்கு பச்சைப் பட்டாடை உடுத்தப்பட்டு, வளையல் மாலை அணிவிக்கப்பட்டது. மயிலாடுதுறை தமிழ்ச்சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்று காவிரி அன்னையை வழிபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com