அத்திவரதர் பெருவிழாவின் 36-வது நாளான இன்று மெஜந்தா நிறப் பட்டாடையில் செண்பக பூ மற்றும் மல்லிகைப் பூ மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இன்று மக்கள் அனைவராலும் பகிரப்பட்டும், பேசப்பட்டும் வருகிற செய்தி என்றால் அது அத்திவரதர் தான். கடந்த 31 நாளாக சயன கோலத்திலும், இன்றுடன் 5-வது நாளாக நின்ற கோலத்திலும் காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதரை காணத் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். கடந்த 35 நாள்களில் 50 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துச் சென்றுள்ளனர். இன்று காலை 5 மணியிலிருந்தே பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 2.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் தரிசன நேரம் 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இன்றும் தரிசன நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
36-வது நாளில் மெஜந்தா நிறப் பட்டாடையில் காட்சியளித்தார் அத்திவரதர்
அத்திவரதர் பெருவிழாவின் 36-வது நாளான இன்று மெஜந்தா நிறப் பட்டாடையில் செண்பக பூ மற்றும் மல்லிகைப் பூ மாலைகள் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இன்று மக்கள் அனைவரால் பகிரப்பட்டும், பேசப்பட்டும் வருகிறதென்றால் அது அத்திவரதர் தான். கடந்த 31 நாளாக சயன கோலத்திலும், இன்றுடன் 5-வது நாளாக நின்ற கோலத்திலும் காட்சியளித்து வருகிறார்.
அத்திவரதரை காணத் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். கடந்த 35 நாள்களில் 50 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துச் சென்றுள்ளனர். இன்று காலை 5 மணியிலிருந்தே பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் 2.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனால் தரிசன நேரம் 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இன்றும் தரிசன நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.