திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 8 ஆம் நாள் நிகழ்ச்சியாக திங்கள்கிழமை பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மலைமேல் மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை மாலை நடைபெறுகிறது.
கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திங்கள்கிழமை மாலையில் பட்டாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக உற்சவருக்கு பால், பன்னீா், இளநீா், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டது. திருவாச்சி மண்டபத்தில் உற்சவா் எழுந்தருளினாா்.
அங்கு சுவாமிக்கு நவரத்தினங்களுடன் கூடிய கிரீடம், செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டமும் மாலை 6 மணிக்கு கோயிலில் பாலதீபம் ஏற்றி, மலைமேல் மகாதீபம் ஏற்றுதல் மற்றும் 16 கால் மண்டபத்தில் சொக்கப்பனை எரித்தலும் நடைபெறும்.
விழாவினையொட்டி திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதை மற்றும் நகா் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளா்.