நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம்

மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.
நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம்

மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது.
 நாமக்கல் நகரின் மையப் பகுதியில், ஒரே கல்லினால் வடிக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயிலில் மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, சுவாமிக்கு காலை 9 மணியளவில் வடை மாலை சாத்துப்படி அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நல்லெண்ணெய், சீகைக்காய், திரவியம், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைக் கொண்டு பூர்ணகும்ப அபிஷேகம் மற்றும் சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு சுவாமிக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
 சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிவித்து செல்லும் பக்தர்கள் திரளானோர் ஆஞ்சநேயர் சுவாமியைத் தரிசிக்க வந்திருந்தனர். நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியைத் தரிசித்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com