இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? 

12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார (பிப்.1 - பிப்.7) ராசி பலன்களை தினமணி ஜோதிடர்..
இந்த வாரம் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசிகளில் உங்க ராசி இருக்கா? 


12 ராசி அன்பர்களுக்கும் இந்த வார (பிப்.1 - பிப்.7) ராசி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எந்தவொரு செயலிலும் உங்களுடைய தனித்தன்மை வெளிப்படும். பொருளாதார நிலையில் ஏற்றங்கள் தென்படும். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும்.  புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். உறவினர்களால் அனுகூலமிராது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்த கெடுபடிகள் குறையும். சக ஊழியர்கள், உங்கள் வேலைகளை தாங்களாக முன்வந்து பகிர்ந்துக் கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும். கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும்.  புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் மற்றவர்களின் பாராட்டைப் பெற்று புதிய பதவியில் அமர்வார்கள். மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள்.  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானை தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 2.

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மூத்த சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தினர் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகள் சற்று கடுமையாகவே நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராகவே முடியும். பேச்சுத்திறமை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். கால்நடைகளால் நன்மை உண்டு. 

அரசியல்வாதிகள் தங்கள் முயற்சிக்கேற்றபடி பொறுப்புகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புகழும் நற்பெயரும் பெறுவார்கள்.  திட சிந்தனையுடன் செயலாற்றி வெற்றி பெறுவார்கள். பெண்மணிகள் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள், கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் பெற்றோர் மற்றும் சகோதரர்களால் பலன் அடைவார்கள்.  தைரியத்துடன் விளையாடி வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: வெள்ளியன்று பெருமாள் கோயிலில் தாயாரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 4.

சந்திராஷ்டமம்: 1, 2.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சியில் சிறிது வெற்றி கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் கெரவம் நிலைத்திருக்கும். உறவினர்களின் அன்பைப் பெற சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு படிப்படியாக வேலைப் பளு அதிகரிக்கும். வேலையில் குறைகளைக் காண காத்திருக்கும் மேலதிகாரிகளை அனுசரித்து நடக்கவும். வியாபாரிகள் புதிய சந்தைகளைத் தேடிச் சென்று முயற்சித்தால்  பொருள்களின் விற்பனை சிறப்பாக நடைபெறும். விவசாயிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். இதனால் ஓரளவு லாபம் உண்டு. நீர்ப்பாசன வசதிகளை பெருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு திருப்திகரமான திருப்பங்கள் ஏற்படும். எதிரிகளால் தொல்லைகள் இருக்காது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் அவை நிறைவு தருவதாக இருக்காது. 
பெண்மணிகள் குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். கணவரிடம் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகள் கல்வியில் அதிக ஈடுபாடு செலுத்திப் படிக்கவும்.

பரிகாரம்: காலை பைரவரை வழிபாடு செய்து வரவும்.  

அனுகூலமான தினங்கள்: 2, 6.  

சந்திராஷ்டமம்: 3, 4, 5.

{pagination-pagination}
கடகம்(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

அறிவும் ஆற்றலும் மிளிரும் காலமிது. ஏற்றமான பொருளாதார நிலை ஏற்படும். முக்கியமான பிரச்னைகளில் தெளிவு என்பது புலப்படும். ஆனாலும் நிம்மதி சற்று குறைந்திருக்கும். உறவினர்கள் நட்புப் பாராட்டுவார்கள். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வர். பணவரவு ஏற்படும். வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். போட்டிகளை நன்கு சமாளித்து தங்களின் பொருள்களை சந்தையில் விற்பனை செய்வர். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். புதிய கழனிகளை வாங்கி வருங்காலத்தை  செம்மைபடுத்த முயல்வீர்கள்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைப் பெறுவர். சக கலைஞர்கள் மத்தியில் செல்வாக்கு வளரும். 

பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்குவர். பேசும் போது கவனமாக இருக்கவும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உற்சாகம் பெறுவீர்கள்.

பரிகாரம்: வியாழனன்று குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 4.  

சந்திராஷ்டமம்:  6, 7.

{pagination-pagination}
சிம்மம்(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். சிக்கனமாக இல்லாவிடில் வருமானத்தை மீறி செலவு செய்ய நேரிடும். எந்த செயலையும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்களும் ஏற்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். தடைகளைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சற்று உஷாராக இருக்கவும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் கிடைக்கும். விளைச்சலைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகள் எதிலும் நிதானத்துடன் செயல்படவும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று கட்சி வளர்ச்சியில் பங்கு கொள்ளவும். கலைத்துறையினர் சிறிய தடைகளுக்குப்பிறகே ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.  பெண்மணிகள் கணவரின் உடல்நலத்தில் அக்கறை கொள்ளவும். குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில்  அதிக கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: பழநி முருகனை சென்று தரிசிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 5, 6.  

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களில் வெற்றிகளை அடைவீர்கள். சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். நம்பிக்கையுடன் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். உடலிலும் மனதிலும் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் பிறக்கும். வழக்குகள் முடிவுக்கு வரும். 

உத்தியோகஸ்தர்கள் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எதிர்பாராத பதவி உயர்வு உங்களைத் தேடிவரும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வருமானத்தைப் பெருக்க முயல்வீர்கள். விவசாயிகள் போட்டி போறாமைகளைச் சந்திக்க நேரிடும். எல்லாவற்றிலும் கவனமாக இருப்பது நல்லது. 

அரசியல்வாதிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். யாரிடமும் வீண் வாக்குவாதங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்கள் ஈடேறும். கலைத்துறையினர் பல தடைகளைத்தாண்டி, புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். வருமானம் குறைவாகவே இருக்கும்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராக இருக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்தவும்.

பரிகாரம்: பார்த்தசாரதிப் பெருமாளை வழிபட்டுவர நன்மைகள் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 2, 5.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வீடு மாற்றும் எண்ணம் உள்ளவர்கள் இப்போது செயல்படுத்தலாம். உறவினர்களின் ஆதரவு சுமாராக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். சக ஊழியர்கள் பாராமுகமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக  உழைக்கவும்.  காலதாமதமானாலும் இறுதியில் வெற்றி தேடிவரும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை உற்பத்தி செய்து பலன் பெறவும். உங்களுக்குக்கீழ் வேலைசெய்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். 

அரசியல்வாதிகளுக்கு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். ஆகவே எவரிடமும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். திட்டமிட்ட வேலைகளைச் சிறிது தள்ளி வைக்கவும். கலைத்துறையினர் நிதானத்துடனும் கவனத்துடனும் நடந்துகொண்டால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்மணிகளுக்கு அந்தஸ்தும் புகழும் உயரும். கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும்.  மாணவமணிகள் படிப்பில் சற்று கவனம் அதிகம் செலுத்தவும்.

பரிகாரம்: விநாயகர், நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 4, 6. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம்(விசாகம் 4-ம் பாதம் முதல்அனுஷம், கேட்டை முடிய)

தந்தையுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தனித்தனிமையை வெளிப்படுத்துவீர்கள். இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். சுபச் செய்திகளால் மனம் திருப்தியடையும்.

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும். மூத்த அதிகாரிகளும் சக ஊழியர்களும் நட்புடன் பழகுவார்கள். பணவரவும் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக இருக்கும். கூட்டாளிகளிடம் நல்லமுறையில் பழகி வரவும்.  விவசாயிகள் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்குவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். கட்சி மேலிடம் அனுகூலமாக நடந்து கொள்ளும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மரியாதையும் மதிப்பும் அங்கீகாரமும் பெறுவார்கள். 

பெண்மணிகள் சூடான வார்த்தைகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் குழப்பமான நிலை தென்படுவதால் கவனமாக இருக்கவும். மாணவமணிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வர்.

பரிகாரம்: "நமசிவாய' மந்திரத்தை ஜெபித்து சிவனருள் கூட்டிக்கொள்ளவும். 

அனுகூலமான தினங்கள்: 1, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பணவரவு சீராக இருக்கும். பழைய கடன்களை வசூலிப்பார்கள். வேலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். இருப்பினும் உறவினர்களின் மனக்கசப்புக்கு ஆளாவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தவும். கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதில் தடைகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனைக் தரும். விவசாயிகளுக்கு கொள் முதலில் லாபம் கிடைக்கும். புதிய ஸ்திர சொத்துகளை வாங்க முற்படுவீர்கள்.     

அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சமூக சேவையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவார்கள். காரணமில்லாமல் மனதில் சற்று அமைதி குறையும். 

மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். உள்ளரங்கு விளையாட்டுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறலாம்.

பரிகாரம்: சனிதோறும் சனீஸ்வரபகவானை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 2, 5. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பேச்சுத் திறமையால் மற்றவர்களைக் கவர்வீர்கள். பயணங்கள் பயன்தரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளால் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ளவும். புதிய சந்தைகளை நாடிச் சென்று அதிக லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கால்நடைகளால் நல்ல பலனுண்டு.

அரசியல்வாதிகளுக்கு இந்த காலகட்டத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். 

கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் காண்பீர்கள். எதிர்பாராத உதவிகளைப் பெறுவீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். விளையாட்டில் வெற்றி கொடி நாட்டுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று பைரவரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 3, 6.  

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் நிலவி வந்த சிரமங்கள் குறையும். மகிழ்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடந்தேறும். சிலர் எதிர்பாராத பயணங்களைச் செய்வார்கள். எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலைகளைச் செய்து முடிப்பதில் சிறிது தாமதம் ஏற்படும். வியாபாரிகள் எதிரிகளால் சில தொல்லைகளைச் சந்திப்பார்கள். கணக்கு வழக்குகளையும் சரியாக வைத்துக் கொள்ளவும். விவசாயிகள் கடுமையாக உழைத்து மகசூலைப் பெருக்குவார்கள். நீர்ப்பாசன வசதி மற்றும் உரங்களுக்காக செலவு செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் திறமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வார்கள். கட்சி மேலிடத்தின் கோபத்திற்கு ஆளாகாமல் நடந்து கொள்வது அவசியம். கலைத்துறையினருக்கு பணவரவு அதிகரிக்கும்.  சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற நன்கு உழைப்பார்கள். விளையாட்டுகளில் வெற்றி பெறவும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாளை சென்று தரிசித்து வரவும்.

அனுகூலமான தினங்கள்: 4, 7.  

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீண்டகாலக் கனவுகளை எப்படியும் நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொல்லை கொடுத்தவர்கள் அடங்கிப் போவார்கள். வாகனங்களைப் பழுது பார்க்கவும் நேரிடும். உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஆளாவார்கள். இதனால் கோரிக்கைகள் நிறைவேறுவது கடினம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமாரான லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு செயலாற்றி லாபம் காண்பீர்கள். விவசாயிகள் குடும்பத்தில் சுபகாரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். கால்நடைகளால் கூடுதல் லாபமுண்டு. 

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும். கட்சி மேலிடத்தின் பார்வையில் இருந்து சற்று விலகியே இருக்கவும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். கொஞ்சம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். 

பெண்மணிகள் சிறிய விபத்துகளுக்கு ஆளாக நேரிடும். அதனால் எச்சரிக்கை தேவை. கணவரிடம் அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 7.  

சந்திராஷ்டமம்: இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com