திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வரும் 13-ஆம் தேதி வருடாந்திர தெப்போற்சவம் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி வரும் 13 முதல் 19-ஆம் தேதி வரை 7 தினங்களுக்கு வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி தினந்தோறும் மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி கோயில் எதிரில் உள்ள குளத்தில் உற்சவர்கள் தெப்பத்தில் வலம் வருவர்.
இவ்விழாவுக்காக கோயில் குளத்தில் உள்ள பழைய நீரை வெளியேற்றி சுத்தம் செய்து புதிய நீரை தேவஸ்தானம் நிரப்பியுள்ளது. மேலும் தெப்போற்சவம் நடைபெறும் தினங்களில் இந்து தர்ம பிரசார பரிஷத் மற்றும் அன்னமாச்சார்யா திட்டம் சார்பில் ஆடல், பாடல், ஹரிகதை, பஜனைகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் குளக்கரையில் நடைபெற உள்ளன.
தெப்பத்தில் வலம் வர உள்ள உற்சவர்கள் விவரம்: