திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழாவையொட்டி நாளை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் 9-ம் நாளான இன்று சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
10-ம் திருவிழாவான நாளை சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 6 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள்பாலிக்கும் தேரோட்டம் நடக்கிறது.
20-ம் தேதி இரவு தெப்பத்திருவிழாவும், 21-ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகின்றது.