ஏழுமலையானை நடிகர் தனுஷ், அவரது மனைவி ஐஸ்வர்யா, நடிகர் ஸ்ரீகாந்த் , அவரது மனைவி வந்தனா ஆகியோர் வியாழக்கிழமை விஐபி பிரேக் முறையில் தரிசித்தனர்.
அதன் பின் தனுஷுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்புப் பிரசாதங்களை வழங்கினர். இதையடுத்து, கோயிலுக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நான் நடித்து வரும் அசுரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளிவரும். ரஜினிகாந்த், அடுத்து வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா? மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதா? என்பது குறித்து அவரே தெரிவிப்பார் என்றார் தனுஷ். அரசியல் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து புறப்பட்டுச் சென்றார்.