அத்திவரதரை மீண்டும் நீருக்கடியில் வைக்கக் கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

அத்திவரதரை மீண்டும் நீருக்கடியில்  வைக்கக் கூடாது. இது குறித்து அனைத்து மடாதிபதிகளும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்தார். 
அத்திவரதரை மீண்டும் நீருக்கடியில் வைக்கக் கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

அத்திவரதரை மீண்டும் நீருக்கடியில்  வைக்கக் கூடாது. இது குறித்து அனைத்து மடாதிபதிகளும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்தார். 
ஸ்ரீவில்லிபுத்தூர் மனவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீசடகோப ராமாநுஜ ஜீயர் சுவாமிகள் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
கடந்த காலங்களில் திருட்டுக்குப் பயந்து அத்திவரதர் உற்சவரை நீருக்கடியில் வைத்தனர். 45 ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது அத்திவரதரை   நீருக்கடியில் வைக்கத் தேவையில்லை. மேலும், இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை வைக்க உள்ளோம். அதற்கான முயற்சியை நான் எடுத்து வருகிறேன். அதேபோல், அத்திரவரதர் மேலே வந்தால் தான் மழை பொழியும். அதை மீண்டும்  நீருக்கடியில் வைக்கக் கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com