ஆகஸ்ட் 9-இல் திருச்சானூரில் வரலட்சுமி விரதம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரலட்சுமி விரதம் அனுசரிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமைகளில் தேவஸ்தானம் சமஷ்டி வரலட்சுமி விரதத்தை அனுசரித்து வருகிறது. அதன்படி வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி இவ்விரதம் அனுசரிக்கப்பட உள்ளது. அன்று காலை ஸ்நபன திருமஞ்சனத்துக்குப் பின் தாயாரை அலங்கரித்து மண்டபத்தில் எழுந்தருளச் செய்து 10 மணி முதல் 12 மணி வரை சிறப்பு சங்கல்பத்துடன் விரதம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் டிக்கெட் பெற்று கலந்து கொள்ளலாம். 
அன்று மாலை 6 மணிக்கு தங்கர தத்தில் பத்மாவதி தாயார் மாடவீதியில் எழுந்தருள உள்ளார். இதை முன்னிட்டு அன்று கோயிலில் நடைபெறும் ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com