மருத்துவ ஜோதிடம் பகுதி 3: புதன், குருவால் உடலில் உண்டாகும் நோய்கள்!

புதன் கிரகம் அழகான ஞானத்திற்கு உரிய அறிவான் என்று சொல்லலாம். பெரும்பாலும்
மருத்துவ ஜோதிடம் பகுதி 3: புதன், குருவால் உடலில் உண்டாகும் நோய்கள்!


புதன் (அறிவன்)
 
புதன் கிரகம் அழகான ஞானத்திற்கு உரிய அறிவான் என்று சொல்லலாம். பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக அதனை அடுத்துள்ள புதனை காண்பது அரிது  என்பதால் நம் முன்னோர்கள் ‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று சொல்வார்கள். இந்த பழமொழியின் மற்றொரு அர்த்தம் - குரு என்பவர் பொன்னவனால்  பெற்ற பொன், பொருள், செல்வம், புத்திரபாக்கியம் அனைத்தும் புதன் என்ற புத்திசாலியால் மட்டும் சரியாக வழிநடத்தி தக்கவைத்துக் கொள்ளமுடியும். 

ஜாதகபடி புதன் வலுத்து லக்கினத்தோடு சரியான நிலையிலிருந்தால் அவர் புத்திசாலியாகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும், சிறந்த வியாபாரியாகவும், கவிஞராகவும்,  வழக்கறிஞராகவும், எழுத்தாளராகவும், ஜோதிட வல்லுநராகவும், தோல்விகளை வெற்றிகளாக மாற்றுபவர்கள், விகட கவியாகவும், கணிதத் துறையில் நிபுணர்கள், பேச்சால்  அடுத்தவர் மனதை மயக்குபவராகவும், அறிவுப்பூர்வமாக விவாதம் செய்பவர்கள், நீதிபதியாகவும் திகழ்வார்கள். புதனின் அனுக்கிரகம் இருந்தால் தான் தொழில் மற்றும்  படிப்பாற்றல் உயர்வடைவர்.

புதனால் உடலில் உருவாக்கப்படும் நோய்கள்

புதன் கிரகம் புத்திசாலியான கிரகம் அதனால் மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர். உடலின் எல்லாவற்றுக்கும் உணர்ச்சிகள் தூண்டும் நரம்பு மண்டலத்தின் அதிபதி புதன்  ஆவார். இவர் சந்திரனின் மகன் என்பதால் புதன் மனதைத் தூண்டி மன ஓட்டமான செயல்களில் ஈடுபடுவர். புதன் யாரோடு சேர்கிறாரோ அந்த கிரக தன்மையை  உள்வாங்கிக்கொள்வர். இந்தஇடத்தில் புதனோடு சேரும் கிரகத்தின் தன்மை அதிகமாகும். ஜாதக கட்டத்தில் முக்கியமாக 6, 8, 12 பாவங்களில் அசுபர் சேர்ந்தால் அவரின்  காரகத்துவம் கொண்ட உறுப்பை புதன் கிரகமானது நோயினை அதிகப்படுத்தும் அதன் தசா புத்திகளில். இதற்கும் நிறையச் சூட்சமங்கள் உண்டு.

புதன் ஏறுப்படுத்தப்படும் நோய்கள் மற்றும் உறுப்புகள்

புதன் என்பவர் தலை முதல் பாதம் வரையான நரம்பு மண்டல அதிபதி, நரம்புத் தளர்ச்சி, சுரப்பி, முக உறுப்புகள், கழுத்து, தோள்பட்டை,தொண்டை, புதன் நெற்றி, நாக்கு,  கழுத்து, புதனால் ஏற்படும் நோய்கள் குடல் புண், தளர்ச்சி, நரம்பு சம்மந்தப்பட்ட நோய், தோல் பிரச்னைகள்,  வாயுவால் தசைப் பிடிப்பு, தேமல், மூட்டுவலி, பித்தப்பை  கோளாறு, வலிப்பு நோய், முடக்கம், புத்தி பேதலிப்பது, நரம்புகளில் ரத்தம் உறைவதும் மாசுகளால் ஏற்படும் நோய்கள், அலைச்சல்களால் ஏற்படும் நோய்கள், இளமையில்  ஏற்படும் நோய், வாயு தொல்லையால் தசைப் பிடிப்பு அல்லது நரம்பு இழுத்துப் பிடிப்பது, ரத்தம் கசிவு, வெண்குஷ்டம் போன்ற நோய்கள் ஏற்படலாம், தொழுநோயின்  அடிப்படை காரணங்கள் புதன் (சூரியன் சேர்க்கை), திருநங்கையாக மாறுதல், முக்கியமாகப் புதனுக்குரிய பித்தம் வாதம் மற்றும் கபத்தால் ஏற்படும் எல்லாவித நோய்களின்  பாதிப்புகள் உண்டாகும்.

தானென்ற புதன் திசையில் சந்திரபுத்தி

தாழ்வான் மாதமது பதினேழாகும்

தேனென்ற அதன் பலனைச் சொல்லக்கேளு

தெரிவையர்கள் கலகமுடன் யிளைப்புசயரோகம்

கோனென்ற ராசாவால் குடிகேடு செய்யும்

கோதையர்கள் தன்னாலே குடிபாழாகும்

வானென்ற வான்பொருளும் வகையில்லாச்சேதம்

வையகத்தில் நீதியில்லா மாதரைச்சேர்வாரே.  

 - புலிப்பாணி

புதன் திசையில் சந்திர புத்திக்காலத்தில் நோயின் தாக்கத்தைக் கூறுகிறார் சித்தர். பெண்களால் கலகமும், இளைப்பு நோய், சயரோகம் முதலிய நோய் உபாதைகளும் ஏற்படும்.  அரசனின் தொல்லையால் குடும்பத்திற்கே கேடு மற்றும் பெண்களாலும் குடும்பமும் பாழாகும். அளவில்லாத செல்வமும் எதிர்பாராவண்ணம் அழியும். தீதியை நினையாத  வேசையரைச் சேர்ந்தின்புறம் சந்தர்ப்பம் ஏற்படும் என்று விவரிக்கிறார்.

புதனால் ஏற்படும் நோய்களின் சிறு தீர்வு

மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும், மெலனின் சூரிய வெளிச்சம் மூலம் கொண்டுவர வேண்டும் தோல் வியாதி வராமல் தவிர்க்க முடிந்தவரை கிரீம் (moisturiser )  உபயோகப் படுத்தக்கூடாது. மூளையின் வேலை எவ்வளவு செயல்படுகிறதோ அதற்கேற்ப யோகா பயிற்சி தேவை. அதிக குடியானது நரம்புத் தளர்ச்சி கொண்டுவரும்  அவற்றினை தவிர்க்கவேண்டும் 

நரம்பு மண்டலம் வலுப்பெற்றிருக்க வைட்டமின் பி-12 தேவைப்படுகிறது, வீட்டு  வைத்தியமாக இயற்கை பழங்கள், முருங்கை கீரை, வெந்தயம், பச்சை பயிறு, ஜாதிக்காய்,  லவங்க பட்டை, மாதுளை பழம் மற்றும் பூ, தேங்காயெண்ணெய், செவ்வாழை பழம் உணவுகளை உட்கொள்ளவேண்டும் மழை மற்றும் குளிர்காலத்தில் சூட்டு  உணவுகளையும், வெயில் காலங்களில் குளிர்ந்த உணவுகளையும் உண்ணவேண்டும். ஏனென்றால் புதன் என்பவர் பித்தம், கபம், வாயு நோய்க்கு உரியவர். எனவே,  விண்ணுக்குரிய துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் கொண்ட நீர் மற்றும் பச்சைக் காய்கறிகள் உட்கொள்ள வேண்டும்.

குரு (பொன்னவன்)

குரு கிரகம் சூரியனிலிருந்து 5-வது மற்றும் ராஜ கிரகமும் ஆகும். ஆங்கிரச முனிவரின் மகனாகப் பிறந்து ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்களையும், 64 கலைகளையும்  கற்றறிந்த மகான் மற்றும் தேவர்களுக்கெல்லாம் குருவாக திகழ்கிறார். நவக்கிரகங்களில் இவர் முழு சுபராகவும், நமக்கெல்லாம் ஆசிரியராகவும் இருக்கிறார். ஜோதிடத்தில்  குருவை அந்தணன், வேந்தன், பிரகஸ்பதி, பொன்னவன், தெய்வ மந்திரி, நற்கோள், புத்திர காரகன், மறையோன், சுரகுரு, தாராபதி, என்றெல்லாம் இவரை அன்பாக  அழைப்பார்கள். திருமணம் நடைபெறவில்லையா, குழந்தைபேருயில்லையா, தரித்திரம், அறிவு மந்தமாக இருக்கிறது என்று யாராவது கூறினால் போதும் அதற்கான பதில் குரு  என்பவரைப் பார்க்கவேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஜோதிடம் பற்றித் தெரியாதவர் கூட குருவை மட்டும் நன்றாக அறிந்திருப்பார்கள். ஜாதகத்தில் ஒருவனை  உயர்த்துவதும், கீழே தள்ளிவிடுவது குருவின் கையில் இருக்கிறது என்பது உண்மை. குரு என்பவர் ஆண் கிரகம் மற்றும் திடகாத்திரமான உடல்வாகு தரக்கூடியவர். 

குரு நின்ற இடம் பாழ் அந்தணன் தனித்து நிற்க அவதிகள் ஏற்படும் என்று ஜோதிடர் கூற்று. பூ என்பதைத் தனியாக இருபதை விட ஒன்றொடுஒன்று சேர்த்துக் கட்டினாள்  அழகு எடுத்துக்காட்டும் என்பதுபோல் ஒரு ஜாதகத்தில் குருவரோடு சேர்ந்து ஒருசில யோகரும் சரியான பாவத்தில் இணைந்தால் சுபத்தன்மை மேலெழுப்பும். ஒருவருக்கு  குரு வக்கிரமாகவோ யோகத்தன்மை இல்லாதவராக இருந்தாலும் அவர் பார்க்கும் பார்வை பலம்பெறும். குருவின் பார்வை மற்றும் பலம் கொண்டுதான் திருமணம், குழந்தை பேறு, கும்பாபிஷேகம் செய்ய, மருந்து உண்ணுதல் அறுவை சிகிச்சை, மற்றும்  நல்ல காரியங்கள் நடைபெற வேண்டும்.

கைரேகையை ஆள்காட்டி விரலுக்குக் கீழே உள்ள குருமேட்டில் வளையம் போல் ஒரு ரேகை இருக்கும் அவை குருவளையம் என்றழைக்கப்படுகிறது. ஜோதிடத்தில் அதாவது  ரிஷபம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகிய நான்கு ராசிகள் குரு இருந்தால் வியாழ வட்டம் அல்லது குரு வளையம் என்பர். ஒருவர் பிறந்த ஜாதகத்தில் குரு பகவான் இந்த  ராசிகளில் ஏதாவது ஒன்றில் இருந்தால் அவருக்கு சமூகத்தில் உயர்வு, கோவில் கட்டுமான பணியில் ஈடுபாடு, பொன் பொருள் சேர்க்கை, நீதித்துறை மற்றும்  வங்கித்துறையில் அதிகாரத்தன்மை மற்றும் எண்ணற்ற யோகா தன்மை உண்டாகும்.

குருவால் உடலில் உருவாக்கப்படும் நோய்கள் 

குருவால் ஏற்பாடு நோய்கள் கொழுப்புக் கட்டி, தசை நார் பாதிப்பு, மூளை செயல் இழப்பது, ஜீரண உறுப்பு பாதிப்பு, சர்க்கரை நோய், மூளை கட்டி, தொடை, பாதம், மூக்கு, நாசி,  வாயுக்கோளாறு, காது சம்மந்தப்பட்ட நோய், தசைப் பிடிப்புகள், சதை பிடிப்பால் உடல் வலி, அடி வயிற்றில் கட்டிகள், ஈறுகளில் ரத்தக் கசிவு, BMI குறைபாடு (Body Mass  Index (BMI), தொடைப் பகுதி, சதைப் பற்றுள்ள அனைத்து பகுதிகள், சுளுக்கு, முடக்குவாதம், பக்கவாதம், குடல் புண், குடலிறக்கம், கொப்பளம், கட்டான கோழை, கபம்  சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாக்கப்படும். முக்கியமாக லக்கினத்திற்கு குரு 6, 8, 12 ஆகிய இடங்களில் நின்றிருந்தால் உடல் வலிமை குன்றிருக்கும், ஞாபக  குறைவு மற்றும் சோர்வு தன்மை ஏற்படும்.

குருவால் ஏற்படும் நோய்களின் சிறு தீர்வு

குரு என்பவர் தங்கத்திற்கு உரியவர் இவற்றினை எல்லாவித நாட்களிலும் அணிந்து கொள்வது நன்று. ஆனால் இந்தக்காலத்தில் தங்கம் இருந்தாலும் அணிவது என்பது  மக்களிடையே ஒரு பீதியாகவே உள்ளது. முற்காலங்களில் உணவை தங்கம் அல்லது வெள்ளி தட்டில் உண்ணுவார்கள். தற்பொழுது அனைவராலும் முடியாத ஒன்று. 

தசைப் பிடிப்பு பிரச்னை உள்ளவர்கள் புளிப்பு (சிட்ரஸ்) தன்மை கொண்ட பழங்களை உட்கொள்ளவேண்டும் சிட்ரஸ் பழங்கள் எலுமிச்சை, ஆரஞ்சு, மற்றும் வைட்டமின் சி  காய்கறிகள் தக்காளி, வெள்ளரி, கீரை, முட்டைக்கோஸ், புரோக்கோலி, குடை மிளகாய், பப்பாளிக் காய் இன்னும் பல உள்ளன. கபம் என்பது உடலின் குளிர்ச்சியைக்  குறிப்பிடுவதாகும். 1483 வகையான நோய்கள் கபத்தால் ஏற்படுகின்ற சித்தர் கூற்று. கபத்தை முறியடிக்க நிறைய வைத்தியங்கள் உள்ளன. இதற்கு முன்புள்ள மருத்துவ  ஜோதிட கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

குரு என்பவரை யோகி இவருக்குப் பிடித்த யோகாவைத் தினமும் காலை வேலையில் செய்தல் குழந்தைகள் நினைவாற்றல் அதிகரிக்கும். திட மனநிலை (strong )  இல்லாதவர்கள் முக்கியமாக கடகம் ராசியோ லக்கினமோ உள்ளவர்கள் தியானம் அவசியம். குரு என்பவர் ஆகாயத்தன்மை கொண்டார் உடலில் எங்கு வெற்றிடம் மற்றும்  கெட்ட நீர்த்தேக்கம் இருந்தால் தசைகளில் கொப்பளம் மற்றும் கட்டி ஏற்படும். முடிந்தவரை போதிய அளவு இளம் சுட்டு வெண்ணீர் குடிக்க வேண்டும்.

குரு தாக்கம் உள்ளவர்கள் கெட்ட கொழுப்பு (LDL cholestrol) அதிக தாக்கம் ஏற்படுத்தும். இவர்களுக்குக் கெட்ட கொழுப்பை முறியடிக்க   மாதுளம் பழம், வெங்காயம்,  பூண்டு, சோயா, லவங்க பட்டை, பார்லி, மஞ்சள், சிட்ரஸ் பழங்கள், குருவிற்கு ஏற்ற மூக்கடலை, ராஜ்மா, முட்டையில் வெள்ளைக் கரு, என உட்கொள்ளவேண்டும். தினமும்  காலையில் சிறிதுநேரம் நடப்பது மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடவேண்டும். உணவில் எண்ணெய் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குரு தாக்கம் உள்ளவர்கள் புகைபிடிக்கக்  கூடாது.    

இன்னும் மற்ற கிரகங்களை மருத்துவ ஜோதிடத்தோடு அறிவியல் ரீதியாக மற்றொரு பகுதியில் கூறுகிறேன்.

குருவே சரணம்

ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி: 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com