புதுவையை அடுத்த பஞ்சவடியில் உள்ள 36 அடி பஞ்சமுக அஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேக விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 20007-ம் ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீவாரி வெங்கடாசலபதி சிலை இங்கு கடந்த மே 10-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அதன்படி ஜூன் 23-ம் தேதி ஐந்து நிலை ராஜேகோயுரம், ஸ்ரீவிநாயகர், ராமன் மற்றும் 36 அடி உயர ஆஞ்சநேயர் சன்னதி விமானங்களுடன் புதியதாக நிர்மாணம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீவாரி வெங்கடாசலபதி சன்னதி விமானத்துக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகளான மகா கணபதி பூஜையுடன் இன்று தொடங்கியது. புதன்கிழமையான நாளை அக்னிமதனம் நடைபெற உள்ளது.