பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் மண்டல அபிஷேகம் துவக்கம்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் மண்டல அபிஷேகம் நேற்று துவங்கியது. 
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் மண்டல அபிஷேகம் துவக்கம்

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் மண்டல அபிஷேகம் நேற்று துவங்கியது. 

பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஏற்கெனவே உள்ள வலம்புரி மகா கணபதி ஜெயமங்கள பட்டாபிஷேக ராமமூர்த்தி சன்னதிகளுடன் ஸ்ரீ வாரி வேங்கடாசலபதிக்குப் புதிதாகச் சன்னதி அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதையொட்டி நேற்று முதல் மண்டாபிஷேக பூஜை துவங்கி, சுவாமி அலங்கரிக்கப்பட்டு மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. மண்டலாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. 48 நாட்கள் நடைபெறும் மண்டலாபிஷேக பூஜையில் பங்கேற்று பக்தர்கள் ஆஞ்சநேயரின் அருளைப் பெறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com