திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் வேற்று மத ஊழியர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று சைவசேத்திர பீடாதிபதி சிவ சுவாமி தெரிவித்தார்.
ஏழுமலையானைத் தரிசிக்க செவ்வாய்க்கிழமை காலை வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் மரியாதை அளித்து வரவேற்றனர். அதன்பின் ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு பிரசாதங்களை வழங்கினர். அவற்றைப் பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
மக்கள் விரும்பும் ஆட்சியை ஜெகன்மோகன் ரெட்டி நடத்தினால் நரேந்திர மோடி போல் மாபெரும் வெற்றி பெறலாம். திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வரும் வேற்று மத ஊழியர்களை உடனடியாகப் பணியிலிருந்து நீக்க வேண்டும்.
ஏழுமலையான் ஆபரணங்கள் தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். அறங்காவலர் குழு ஹிந்து தர்மத்துக்கு எதிராகச் செயல்பட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.