சீனிவாசமங்காபுரம் கோயில் பிரம்மோற்சவம்: அனுமந்த வாகனத்தில் வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரர்

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கோயிலில் அனுமந்த வாகனத்தில் கோதண்டராமராக கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார். 
அனுமந்த வாகனத்தில் மாடவீதியில் வெள்ளிக்கிழமை காலை வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரர்.
அனுமந்த வாகனத்தில் மாடவீதியில் வெள்ளிக்கிழமை காலை வலம் வந்த கல்யாண வெங்கடேஸ்வரர்.


திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கோயிலில் அனுமந்த வாகனத்தில் கோதண்டராமராக கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார். 
சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலையில், ராமருக்கு தாசனாக விளங்கிய அனுமந்தனின் வாகனத்தில் கோதண்டராமராக கையில் வில் ஏந்தி கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார்.   அதன்பின் மதியம் உற்சவமூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு கல்யாண மண்டபத்தில் வசந்தோற்சவமும் நடத்தப்பட்டன. பின்னர் மாலை 5 முதல் 6 மணி வரை தங்கத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார். 
பெண்கள் திரண்டு தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது. இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் மாடவீதியில் கல்யாண வெங்கடேஸ்வரர் வலம் வந்தார். இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com