விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி திருவிழாவின் 5-ம் நாளான நாளை தீமிதி உற்சவம் நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கடந்த 5-ம் தேதி மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 5-ம் நாளான நாளை மாலை தீமிதி உற்சவம் நடைபெற உள்ளது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட உள்ளது. 7-ம் நாளான திங்கள்கிழமை திருத்தேர் வடம் பிடித்தலும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அ.இரா.பிரகாஷ், கூடுதல் உதவி ஆணையர் மோகனசுந்தரம், அறங்காவலர் கு.கணேசபூசாரி உள்ளிட்ட அறங்காவலர்கள், கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.