திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நாளை (மார்ச் 10) நடைபெறுகிறது.
விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் முடித்து, காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீன லக்னத்தில் அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தஞ்சாவூர் மண்டல இணை ஆணையரும், சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையருமான (பொ) தென்னரசு, கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் செய்கின்றனர்.