திருமலையில் பௌர்ணமி கருட சேவை ரத்து

திருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தை முன்னிட்டு, பௌர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.


திருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தை முன்னிட்டு, பௌர்ணமி கருடசேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று இரவு வேளையில் கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் கருட சேவையைக் காண முடியாத பக்தர்கள் பௌர்ணமி நாளில் கோயிலுக்கு வந்து கருட சேவையை தரிசித்து வருகின்றனர். 
இந்நிலையில், திருமலையில் தற்போது வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருவதால், வரும் 20-ஆம் தேதி இரவு பௌர்ணமியை ஒட்டி நடைபெறவிருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com