சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் சித்திரைத் தேர்த் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், சங்ககிரியில் ஞாயிறன்று நடைபெற்றது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளையொட்டி சித்திரைத் தேர்த் திருவிழாவை வைகாசி மாதங்களுக்கு மாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
திருவிழா மே 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சுவாமி மலையிலிருந்து நகருக்கு எழுந்தருளதலும், அதையடுத்து மே 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதலும், மே 16 ஆம் தேதி சென்னகேசவப்பெருமாள், உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி ஆகிய சுவாமிகள் எழுந்தருளி திருத்தேர் வடம் பிடித்தலும், மே 27-ஆம் தேதி சுவாமிமலையேற்றம் வைபவமும் நடைபெற உள்ளன.
மலையிலிருந்து சுவாமி நகருக்கு எழுந்தருளி மலையேற்றம் வரை மலையடிவாரத்தில் உள்ள தங்கு மண்டபத்தில் அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி உற்சவ மூர்த்திகளுக்கு நண்பகல் 12 மணிக்கும், இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளன.