ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை இரவு புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற புஷ்ப யாகம். புஷ்ப யாகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னார்.
ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற புஷ்ப யாகம். புஷ்ப யாகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னார்.


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை இரவு புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் கடந்த 13 - ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கி நடைபெற்று வந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் கடந்த 21-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவு நாளான திங்கள்கிழமை புஷ்ப யாகம் நடைபெற்றது.

இதையொட்டி ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வெள்ளிக்கிழமை  இரவு ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு மல்லிகைப் பூ, ரோஜாப்பூ,  சம்பங்கி, விரிச்சிப் பூ, பலவித வண்ண ரோஜாக்கள் மரிக்கொழுந்து மற்றும் துளசி போன்ற மலர்களால் மந்திரங்களை சொல்லி பட்டர்கள் புஷ்ப யாகம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டாள்- ரெங்கமன்னாரை வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com