இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது? வாங்க பார்க்கலாம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 17 - மே 23) பலன்களை தினமணி ஜோதிடர்..
இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது? வாங்க பார்க்கலாம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மே 17 - மே 23) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பெயரும் புகழும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலப்படும். மருத்துவச் செலவுகள் குறையும். பிறருக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வீண் அலைச்சல்கள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். மேலதிகாரிகளும் சக ஊழியர்களும் சகஜமாகப் பழகுவார்கள். வியாபாரிகளுக்கு வியாபார ரீதியாக இருந்து வந்த அலைச்சல்கள் டென்ஷன் ஆகியவை குறையும். வாடிக்கையாளர்கள் உங்களை நோக்கி வருவர். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி, லாபம் அதிகரிக்கும். விவசாய உபகரணங்களை வாங்கி, மேலும் முன்னேற்றம் அடைய முயற்சி செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் புதிய பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். பெண்மணிகள் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். பேச்சில் நிதானம் தேவை. மாணவமணிகள் படிப்பிலும் விளையாட்டிலும் நேர்த்தியுடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 17, 18.

சந்திராஷ்டமம்: 19, 20.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களில் படிப்படியான வெற்றிகளை அடைவீர்கள். சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். மனவளத்தை பெருக்கிக்கொள்ள யோகா, ப்ராணாயாமம் செய்யுங்கள்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவார்கள். சக ஊழியர்களும் உதவியாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய முறைகளைப் பின்பற்றி வியாபாரத்தைப் பெருக்குவார்கள். புதிய வாடிக்கையாளர்கள் வருகை இருக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபம் தொடரும்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளைப் பெறுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சக கலைஞர்களும் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவமணிகள் படிப்பில் கவனத்தைச் செலுத்தி அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள். வெளிவிளையாட்டுகளில் கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் விநாயகரை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 17, 19.

சந்திராஷ்டமம்: 21, 22.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியடையும். திட்டமிட்ட வேலைகளை கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். செயல்களை குறுக்கு வழியில் செய்ய வேண்டாம். உடல்பலம் பெற உடற்பயிற்சி செய்யுங்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு அதிகரிப்பதால் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகள் சற்று கடுமையாகவே நடந்துகொள்வார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். மார்க்கெட்டிங் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் சாதகமாகவே முடியும். விவசாயிகளும் எதிர்பாராத நல்ல மகசூலைப் பெறுவார்கள். கால்நடைகளின் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்யவும். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். கலைத் துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். உங்கள் முயற்சியை மற்றவர்கள் பாராட்டுவர். பெண்மணிகளுக்கு பணவரவு நன்றாக இருக்கும். கணவருடன் சுமுகமாக இருந்தாலும் அவ்வப்போது சிறு மனக்கசப்புகளை சந்திக்க நேரிடும். மாணவமணிகள் ஆசிரியரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை நெய் தீபமேற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 18, 19.

சந்திராஷ்டமம்: 23.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தெய்வ அனுகூலம் ஏற்படும். பொருளாதாரத்தில் சுமாரான முன்னேற்றம் தென்படும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கும். உடன்பிறந்தோரால் நன்மையடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு மனதை அரித்து வந்த பிரச்னைகள் விலகும். மேலதிகாரிகள் சமயோசித புத்தியைப் பாராட்டுவார்கள். வியாபாரிகளுக்கு சிக்கல்கள் விலகி, சுமுகமான நிலைமை உருவாகும். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்கி வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவினால் சாதனைகளைச் செய்வீர்கள். கலைத் துறையினர் சக கலைஞர்களிடம் உதவிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகள் கணவரின் ஆதரவையும் பெற்றோரின் அரவணைப்பையும் பெறுவார்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: சிவபெருமானையும் சூரியபகவானையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 17, 20.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சுமாராக இருக்கும். செயல்கள் செய்யும்போது அதைரியம் உண்டாகும். எதிர்பாராத குழப்பங்களும் வரும். இறைவழிபாட்டைக் கூட்டிக் கொள்வது நல்லது. மலை போல் வரும் துன்பங்கள் பனி போல் விலகிவிடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். செய்கிற வேலைகளில் சிறு சிறு குறைகள் உண்டாகும். தேவையான பணவரவு இருக்கும். வியாபாரிகளுக்கு எதிரிகளால் தொல்லை ஏற்படும். கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாகவே இருக்கும். புதிய குத்தகைகளாலும் லாபம் கிடைக்காது. 

அரசியல்வாதிகளின் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். மேலிடத்திடம் எதிர்பார்த்த பாராட்டுகள் கிடைக்கும். கலைத் துறையினருக்கு உழைப்புக்குத் தகுந்த பலன் கிட்டும். வரவேற்புகள் குறைவாக இருக்கிறதே என்று கவலைப் படாதீர்கள். பெண்மணிகளுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கையம்மனை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 18, 20.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டு பழைய கடன்களை அடைப்பீர்கள். தொழிலிலும் நல்ல முனேனேற்றம் தென்படும். சோம்பிக்கிடந்த காரியங்கள் அனைத்தும் சுறுசுறுப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் பலப்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு இது சிறப்பான காலமாகும். சிலருக்கு பணி மாற்றமோ, இடமாற்றமோ ஏற்பட வாய்ப்புண்டு. சக ஊழியர்களிடம் இணக்கம் இருக்காது. வியாபாரிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை விலகும். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். விவசாயிகளுக்கு லாபம் சுமாராக இருக்கும். புதிய சிக்கல்கள் உருவாகலாம். செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள் இலக்கை நிர்ணயித்துக் கொண்டு தங்கள் எண்ணங்களைச் செயல்படுத்தவும். குறிக்கோள்களை எட்டும் வரை, போராட்டங்களை கைவிட மாட்டீர்கள். கலைத் துறையினர் வெற்றிமேல் வெற்றி காண்பார்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் பூர்த்தியடையும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

பரிகாரம்: புதனன்று பெருமாளையும் சனியன்று சனீஸ்வரரையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 19, 20.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உங்களின் நெடுநாளைய எண்ணங்கள் ஈடேறும். கடினமான உழைப்பிற்குப் பிறகே வெற்றி உங்களைத் தேடிவரும். பூர்வீகச் சொத்து விஷயங்கள் சாதகமாக முடிவடையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்காவிட்டாலும் கோரிக்கைகள் சிரமமின்றி நிறைவேறும். வியாபாரிகளைத் தேடி பலவகையிலும் லாபம் வரும். புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தியில் நல்ல பலன் கிடைக்கும். விவசாய தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும்.

அரசியல்வாதிகளைத் தேடி தொண்டர்கள் குவிவார்கள். அவர்களின் குறைகளை அக்கறையுடன் பரிசீலிப்பது நல்லது. கலைத் துறையினர் கடினமான முயற்சிகளுக்குப் பின்பே புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு காணப்படும். பெண்மணிகளுக்கு கணவரிடம் உள்ள ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். மாணவமணிகள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள். கல்வியிலும் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி தீபமேற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 17, 21.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பெரிய திருப்பங்கள் எதையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. பணவரவு சீராக இருக்கும். சிலருக்கு வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். உறவினர்களிடம் பொறுப்புடனும் பொறுமையுடனும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு அதிகரிக்கும். அவற்றை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக இருக்கும். புதிய முதலீடுகளுக்கான முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். விவசாயிகள் அதிகமாக உழைத்து மகசூலைப் பெருக்கவும். புதிய நிலங்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி இராது.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். மக்களுக்கான போராட்டங்களில் மட்டும் கலந்து கொள்ளவும். கலைத் துறையினருக்கு சக கலைஞர்களே வாய்ப்புகளைத் தேடித் தருவார்கள். செலவு செய்யும்போது கவனமாக இருக்கவும். பெண்மணிகள் அனைவரிடமும் சற்று கவனத்துடன் பழகவும். குடும்பத்தில் நடைபெறும் சுபகாரியங்கள் குழப்பத்தில் ஆழ்த்தும். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும். விளையாட்டில் புதிய யுக்திகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: புதனன்று ஸ்ரீ ராமரையும் சனியன்று ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 18, 21.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். ஒதுங்கி இருந்த உறவினர்கள் வந்து சேர்ந்து கொள்வார்கள். சிலருக்கு நீண்ட நாள்களாக இருந்து வந்த உபாதைகள் நீங்கும். செல்வமும் செல்வாக்கும் உயரும். சொத்துப் பிரச்னைகளில் இடையூறுகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் எந்தக் குறையும் ஏற்படாது. வியாபாரத்தை விரிவு படுத்தும் எண்ணத்தை தற்சமயம் தள்ளிப்போடவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகி வருமானம் பெருகும். புதிய குத்தகைகளால் லாபம் பெருகும்.

அரசியல்வாதிகள் கட்சிப்பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கலைத் துறையினருக்கு விட்டுப்போன வாய்ப்புகள் தேடிவரும். செயல்களில் திறமை அவசியம். பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை. மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். மனதை ஒருமுகப்படுத்தும் கலையை கற்பது நல்லது. விளையாட்டில் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானை தீபமேற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 20, 22.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

முயற்சிகள் வெற்றி பெறும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உறவினர்களின் மனக்கசப்புக்கு ஆளாக நேரிடும். சூட்சும அறிவால் மற்றவர்களை எடைபோட்டுப் பழகுங்கள். தினமும் சிறிது நேரம் தியானம் செய்யவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கொடுத்த வேலைகளை திறமையாக முடிக்க முயலவும். கடமை தவறாமல் உழைக்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்த எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும். பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையாகப் பழகுவார்கள். குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். விளையாட்டில் எதிர்பார்த்த வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: காலபைரவரை தேய்பிறை அஷ்டமியிலும் செவ்வாயன்று துர்க்கையையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 22 23.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட செயல்களில் வெற்றிவாகை சூடுவீர்கள். எல்லோருக்கும் உதவிகள் செய்து பெருமையடைவீர்கள்.பேசும் நேரத்தில் எச்சரிக்கை தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்காது என்பதால் இருக்கும் இடத்திலேயே திறம்பட செயல்படுங்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தை அள்ளுவார்கள். சிறு தடைகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்கும் தைரியத்தைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும்.

அரசியல்வாதிகள் கவனத்துடன் இருக்க வேண்டிய காலமாகும். கட்சி மேலிடத்தில் உங்களால் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கலைத் துறையினர் திறமைகளை வளர்த்துக்கொண்டு மற்றவர்கள் பாராட்டும் படி நடந்து கொள்வார்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை ஓங்கும். வீட்டுக்குப் புதிய பொருள்களை வாங்குவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். விளையாட்டில் எதிர்பார்த்த வெற்றியைக் காண்பீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை மனதார பிரார்த்தனை செய்யவும்.

அனுகூலமான தினங்கள்: 22, 24.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவும் பயணங்களில் லாபமும் உண்டு. உடன்பிறந்தோர் அனுகூலம் உண்டு. எதிர்பாராத வகையில் பொருள் சேரும். தன்னம்பிக்கைப் பலப்படும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். மேலதிகாரிகளின் ஆதரவோடு விரும்பிய இடமாற்றம், ஊதியத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுப் படுத்துவீர்கள். விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கட்சிமேலிடத்தின் பாராட்டு போன்ற சந்தோஷமான நிகழ்ச்சிகள் ஏற்படும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். வேலைகளைச் சுலபமாக முடித்து பாராட்டுகள் பெறுவார்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமை காண்பார்கள். எதிர்பாராத உதவிகளைப் பெறுவார்கள். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.

பரிகாரம்: பட்டீஸ்வரம் துர்க்கையம்மனை வழிட்டால் நன்மைகள் கூடும்.

அனுகூலமான தினங்கள்: 21, 24.

சந்திராஷ்டமம்: 17, 18.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com