திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோயிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
வீரராகப் பெருமாள் கோயிலில் வைகாசி விசாகத்தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் 10-ம் நாளான நேற்று தெப்பத்திருவிழா நடைபெற்றது.
நேற்று மாலை தெப்போற்சவம் விமரிசையாக நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வீரராகவப்பெருமாள் தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தெப்பத்தைச் சுற்றிலும் நின்று பூ தூவி வழிபட்டனர்.