பண்ருட்டி அருகே கட்டமுத்துப்பாளையம் கிராமத்தில் 41 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கட்டமுத்துப்பாளையம் கிராமத்தில் செல்வ விநாயகர் சீதாலட்சுமண பரதசத்ருகண ராமசந்திர மூர்த்தி சமேத 41 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இக்கோயிலில், நேற்று மகாகும்பாபிஷேகம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி 22-ம் தேதி பகவத் அனுக்ஞை, புண்யாகவாசனம், மகாசாந்தி திருமஞ்சனம், அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல் நடந்தது. இதையடுத்து நேற்று காலை 8.00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 8.50 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடந்தது. இரவு 9.00 மணிக்கு உற்சவர் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது.
இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.