செய்திகள்
அன்னதானக் கூடத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து
திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தில் வெள்ளிக்கிழமை மதியம் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
திருமலையில் உள்ள அன்னதானக் கூடத்தில் வெள்ளிக்கிழமை மதியம் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
திருமலையில் ஏழுமலையான் கோயில் அருகில் அன்னதானக் கூடத்தில் தேவஸ்தானம் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறது. இந்தக் கூடத்துடன் காய்கறிகளைப் பதப்படுத்தும் குளிர்சாதன அறை உள்ளது. அங்கு காய்கறிகளைக் கொண்டு செல்ல தேவஸ்தானம் லிஃப்ட் ஒன்றை அமைத்திருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் லிஃப்ட் திடீரென்று அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. லிஃப்டில் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. பின்னர் தொழில்நுட்பப் பணியாளர்கள் வந்து லிஃப்டைப் பழுது பார்த்தனர்.