திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 26) உழவாரப் பணி நடைபெறுகிறது.
இது தொடர்பாக ஸ்ரீநெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் பக்தர் பேரவை வெளியிட்ட அறிக்கை: ஸ்ரீநெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயில் பக்தர் பேரவை சார்பில் ஒவ்வொரு மாதமும் 4-வது ஞாயிற்றுக்கிழமை உழவாரப் பணி நடைபெறுகிறது.
அதன்படி 239-வது உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை (மே 26) நடைபெறுகிறது. உழவாரப் பணியில் பங்கேற்க விரும்புபவர்கள் நெல்லையப்பர் கோயிலில் உள்ள ஸ்ரீ ஆறுமுக நயினார் சன்னதியில் காலை 8.30 மணிக்கு கூடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.