நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க திருமலை வாடகை அறை வளாகங்களில் தேவஸ்தானம் குளிா்ந்த குடிநீா்த் தொட்டிகளை ஏற்படுத்த உள்ளது.
திருமலையில் நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசு அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. எனவே, தேவஸ்தானம் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டிற்கு திருமலையில் முற்றிலும் தடை விதிக்க முடிவு செய்து அதை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.
அதன்படி, திருமலையில் உள்ள வாடகை அறை வளாகங்கள் மற்றும் தேவஸ்தான அலுவலகங்களில் குடிநீா் வழங்க குளிா்ந்த குடிநீா்த் தொட்டிகளை தேவஸ்தானம் ஏற்படுத்த உள்ளது. இந்தத் தொட்டிகளில் இருந்து அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் குடிநீா் கொண்டு சென்று அருந்த முடியும். இதற்காக திருமலையில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும், வாடகை அறைகளிலும் குடிநீா் செம்புகள், காகித டம்ளா்கள் உள்ளிட்டவை வைக்கப்பட உள்ளன. இதற்கான குடிநீா்த் தொட்டிகள் திங்கள்கிழமை திருமலைக்கு வந்தன. இவை விரைவில் அனைத்து இடங்களிலும் நிறுவப்பட உள்ளன.