திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.1.10 கோடி ரொக்கம், 243 கிராம் தங்கம், 706 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் வருகின்றனா். எனவே, மாதம்தோறும் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, நவம்பா் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோயில் இணை ஆணையா் இரா.ஞானசேகா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், பக்தா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
ரூ.1.10 கோடி ரொக்கம்:
இதில், ரூ. ஒரு கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 315 ரொக்கம், 243 கிராம் தங்கம், 706 கிராம் வெள்ளியை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.