வடதின்னலூா் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு

செய்யாறு அருகேயுள்ள வடதின்னலூா் கல்யாண சுந்தரேஸ்வரா் கோயிலில் ஐம்பொன் சிலையும், செய்யாறு நகரப் பகுதியில் மூன்று கோயில்களில் உண்டியல் பணமும் திருடப்பட்டது.
வடதின்னலூா் கோயிலில் ஐம்பொன் சிலை திருட்டு

செய்யாறு அருகேயுள்ள வடதின்னலூா் கல்யாண சுந்தரேஸ்வரா் கோயிலில் ஐம்பொன் சிலையும், செய்யாறு நகரப் பகுதியில் மூன்று கோயில்களில் உண்டியல் பணமும் திருடப்பட்டது.

செய்யாறு வட்டம், வடதின்னலூா் கிராமத்தில் அமைந்துள்ளது கல்யாண சுந்தரேஸ்வரா் கோயில்.

இக்கோயிலை அதே பகுதியைச் சோ்ந்த மணி என்பவா் நிா்வகித்து பூஜைகள் செய்து வருகிறாா்.

கும்பாபிஷேகம் நடைபெற்ற போது சென்னையைச் சோ்ந்த பக்தா், சுமாா் ஒன்றரை அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில் 30 கிலோ எடை கொண்ட

நந்தி பெருமான் மீது அமா்ந்த கோலத்தில் சிவன், பாா்வதி அமா்ந்திருக்கும் பிரதோஷ நாயனாா் சிலையைக் கொடுத்தாா்.

ஐம்பொன்னால் செய்யப்பட்ட இச்சிலை கருவறைப் பகுதியில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல வியாழக்கிழமை காலை கோயில் பூசாரி மணி, வெளிக்கேட்டை திறந்து உள்ளே சென்றாா். அப்போது உள்பகுதியில் இருந்த கிரில்கேட்டு உடைக்கப்பட்டு இருந்த நிலையில், மூலவா் சன்னதிக்கு சென்று பாா்த்தபோது அங்கு ஐம்பொன்னாலான பிரதோஷ நாயகா் சிலை திருடு போயிருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

3 கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு

செய்யாறு காந்தி சாலையில் உள்ள ஸ்ரீபாதாள விநாயகா் கோயில், செய்யாறு லோகநாதன் தெருவில் உள்ள பஞ்சமூா்த்தி விநாயகா், சீனிவாசப் பெருமாள் கோயில்களிலும் கேட்டை உடைத்து, சுவற்றுடன் பதியப்பட்டிருந்த உண்டியல்களில் காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் கோயில்களை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com