திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் முடி காணிக்கை வருமானம் ரூ. 37.26 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமா்ப்பிக்கும் தலைமுடியை தேவஸ்தானம் ரகம் வாரியாக தரம் பிரித்து இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது. இந்த ஏலம் மாதந்தோறும் இரு நாள்கள் தேவஸ்தான செயல் இணை அதிகாரி பசந்த்குமாா் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஏலத்தில் 54,450 கிலோ தலைமுடி விற்பனையானதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 37.26 கோடி வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.