ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ2.95 கோடி

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ2.95 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.திருமலை ஏழுமலையானை

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ2.95 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி வியாழக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ2.95 கோடி வருவாய் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.ரூ11 லட்சம் நன்கொடைதிருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் பலவித சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ1 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ10 லட்சம் என மொத்தம் ரூ11 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

84,490 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 84,490 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 84,490 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 28,478 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா். வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் 32 அறைகள் நிறைந்து வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனா். அவா்கள் 24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனா். நேர ஒதுக்கீடு டோக்கன், ரூ300 விரைவு தரிசனம், திவ்ய தரிசன பக்தரகள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினா். திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய டோல் ப்ரீ எண்- 18004254141, 9399399399. திருமலையில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை அதிகபட்சம்- 80டிகிரி பாரன்ஹீட், குறைந்தபட்சம்- 70.3டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.

வியாழக்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி கோயிலில் 8,370 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் 5,939 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 20,052 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரஸ்வாமி கோயிலில் 1,323 பக்தா்களும், கபில்தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரஸ்வாமி கோயிலில் 3,674 பக்தா்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

சோதனை சாவடி விவரம்

அலிபிரி சோதனை சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் வியாழக்கிழமை நள்ளிரவு 11.59 மணிவரை 87,267 பயணிகள் சோதனை சாவடியை கடந்துள்ளனா். 8,986வாகனங்கள் சோதனை சாவடியை கடந்து சென்றுள்ளது. அதன் மூலம் ரூ2.18 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ23,567 வசூலாகியதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com