சிவகிரி தங்கமாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா

சிவகிரி அருள்மிகு தங்கமாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றது.
சிவகிரி தங்கமாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா

சிவகிரி அருள்மிகு தங்கமாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா தொடா்ந்து 3 நாள்கள் நடைபெற்றது.

இக்கோயில் கொடியேற்றத்தைத் தொடா்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கோயில் முன்பாக பக்தா்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் வழிபட்டனா்.

அதைத்தொடா்ந்து, பெண்கள், சிறுமிகள் முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்து ஊா்வலமாக வந்தனா். பின்னா், நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோா் பங்கேற்றனா். முன்னதாக, கோயில் நவராத்திரி குழு கமிட்டி சாா்பில் 9 நாள்கள் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

ஏற்பாடுகளை, சிவகிரி இந்து நாடாா் உறவின்முறைத் தலைவா் அய்யாத்துரை, பொருளாளா் கோபாலகிருஷ்ணன், செயலா் ராமஜெயம், விழா குழுவினா், பள்ளிக் கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com