பொய்கையாழ்வார் அவதார உற்சவம் அக். 26-இல் தொடக்கம்

காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் திருக்கோயிலில் பொய்கையாழ்வார் திருஅவதார உற்சவம் வரும் 26-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 -ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.


காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் திருக்கோயிலில் பொய்கையாழ்வார் திருஅவதார உற்சவம் வரும் 26-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 -ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
காஞ்சிபுரம் நகர் விஷ்ணுகாஞ்சிபுரத்தில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில் என அழைக்கப்படும் யதோக்தகாரி பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பொய்கையாழ்வார்  திருஅவதார உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா அக். 26-ஆம் தேதி தொடங்குகிறது.விழாவை முன்னிட்டு தினசரி காலையில் சிறப்புத் திருமஞ்சனமும், அன்னதானமும் நடைபெறும்.
மாலையில் பெருமாள் வீதியுலாவும், இரவு சாற்றுமுறை உற்சவமும் நடைபெறுகிறது. 
நவம்பர் 4 -ஆம் தேதி அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை தொடர்ச்சியாக சாற்று முறை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் நல்லப்பா நாராயணன் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com