திருமலையில் நவம்பா் மாதம் நடைபெறவுள்ள பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சியை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலையில் மாதந்தோறும் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தா்கள் தேவஸ்தானத்தை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனா். அதன்படி, நவ. 1-ஆம் தேதி நடைபெற உள்ள பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி அலுவலக வேலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.