செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் இந்திரா நகர் ஸ்ரீவினைதீர்த்த முத்துமாரியம்மன் கன்னியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் திங்கள்கிழமை (செப். 16) நடைபெறுகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை அஷ்டபந்தன விழாவும், திங்கள்கிழமை கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
விழாவை அகஸ்திய கிருபா சிவத்திரு அன்புச்செழியன் நடத்தி வைக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.