அறிவியல் ஆய்வு
மஞ்சள் என்பது குர்க்குமின் (Curcumin) என்ற பாலிபினாலிக் வேதியியல் பொருள் அடங்கியுள்ளது. இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய நன்மை சொல்ல முடியதாக அளவு பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. மஞ்சளின் தாயகம் ஆசிய கண்டம், இவற்றில் இந்தியாவில் அதிகம் புனிதப் பொருளாக மற்றும் அருமருந்தாக கொண்டாடப்படுகிறது. இந்த குர்குமின் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதிலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தைச் சீரமைப்பதிலும் சிறந்து செயல்படுகிறது.
இந்த வேதியியல் ரிதீயாக பொட்டாசியம் சத்து அதிகமாகவும் அவற்றோடு எதிர் ஆக்ஸிகரணியாகவும் எதிர் தொற்றாகவும் செயல்படுகிறது. மஞ்சள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும், மூளை தொடர்பான மறதி நோய் மற்றும் மன அழுத்த பிரச்னைகளை போக்கும் ஆற்றல் கொண்டது என்று அறிவியல் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் அதிக உணவாகவோ மருந்தாகவோ உபயோகபடுத்திக்கிறோம். ஆனால் வெளிநாட்டவர் காப்புரிமை (Patent) வாங்கிவிட்டனர். இதுவே நமக்குக் கொஞ்சம் அவமானம் தான். மஞ்சள் என்பது முதலில் நிறத்துக்காக உபயோகப் படுத்தினர் பின்பு அவற்றினை சித்தர்கள் மருந்தாக மற்றும் ஆன்மீக ரீதியாகச் செயல்படுத்தப்பட்டது. இந்தியாவில் மஞ்சள் வகையில் கப்பு மஞ்சள், கரி மஞ்சள், மர மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என நான்கு முக்கிய வகைகள் உண்டு.
ஆன்மீக ஜோதிட அலசல்
நோய்களுக்கு குட் பை (good bye)
பொன்னிறமாம் மேனி புலானாற்ற மும்போகும்
மன்னு புருட வசியமாம் பின்னியெழும்
வாந்திபித்த தோடமையம் வாதம் போற் தீ பனமாங்
கூர்ந்தமஞ்ச ளின்கிழங்குக்கு
தலைவலிநீ ரேற்றஞ் சளையா மேகம்
உலைவுதரும் பீநசத்தி னுமே வலிசுரப்பு
விஞ்சு கடிவிட மும் வீறுவிர ணங்களும் போம்
மஞ்சள் கிழங்குக்கு மால்
மஞ்சட் குளிதனக்கு மாறாத்துர்க் கந்தமொடு
விஞ்சுமுக சாட்டியமும் விட்டகலுந் கொஞ்சலுறும்
ஐய மொழியு மடர்வியர்வுங் காணாது
வைய மதனில் வழுத்து
நீர்க்கடுப்பு காசமொடு நீடு விடாசுரமுந்
தீர்க்க நமைச்சல் வெப்புஞ் சேர்மலமும் பார்க்கு ண்மிக
அஞ்சியே யேகுமஞ்ச ளாம்வத்தி ரம்புனைந்தால்
வஞ்சியே நன்றாய் வழுத்து
- (அகத்தியர் குண பாடம்)
தோல் நோய்களுக்கு அருமருந்து மற்றும் தோல் பளபளப்பாகும் தன்மை கொண்டது. அதனால் தான் இன்று இதைக் கொண்டு சோப்பு கிரீம் என்று பல உருவில் விற்பனை ஆகிறது. மஞ்சள் விலை குறைவு அதேயே கிரீமாக மாறும்பொழுது அதேயே நாம் அதிகவிலை கொடுத்து வாங்கி உபயோகிக்கிறோம் அதைத் தவிர்த்தல் நல்லது. மஞ்சளை எவ்வாறெல்லாம் உட்கொள்ளலாம் என்று நம் சித்தர்கள் கூறியபடி நடப்போம். முடிந்தவரை அலோபதி மாத்திரை தவிர்ப்போம் வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு தீர்வு காண்போம்.
குருவே சரணம்
- ஜோதிட சிரோன்மணி தேவி
Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com