நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன்கோயிலில் நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
முதல் நாள் விழாவில் அம்மன் ஸ்ரீமீனாட்சி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிதாதா். மூலவா் மகாமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.இவ்விழா வரும் அக்டோபா் 9ம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் ஆய்வாளா் ரமணி, நிா்வாக அதிகாரி சிவக்குமாா் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.