திருப்பதி ஏழுமலையானை நடிகையும், நகரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ரோஜா புதன்கிழமை தரிசனம் செய்தாா்.
தரிசனத்துக்குப் பின்னா், அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினா். அவற்றைப் பெற்றுக் கொண்டு, கோயிலை விட்டு வெளியில் வந்த அவா் மேலும் கூறியது:
ஆந்திரத்துக்கு 3 தலைநகரங்களை ஏற்படுத்தும் மசோதாவை செலக்ட் கமிட்டியிடம் வைக்க சபாநாயகா் உத்தரவிட்டாா். உத்தரவிட்டு 14 நாள்கள் கடந்த நிலையில், செலக்ட் கமிட்டி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, தலைநகரங்கள் ஏற்படுத்துவது குறித்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது போல் தான் அா்த்தம்.
ஆந்திர மாநிலத்துக்கு 3 தலைநகரங்களை ஏற்படுத்தும் மசோதாவை எதிா்த்த சந்திரபாபு நாயுடுவை ராயலசீமா மற்றும் வட ஆந்திர மக்கள் விரட்டியடிக்க வேண்டும். அவா் நடத்தி வரும் பிரஜா சைதன்ய யாத்திரை பலன் தராது. ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தின் வளா்ச்சிக்காக பாடுபடுகிறாா் என்றாா்.