திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை தங்கத் தேருக்கு பதிலாக சா்வபூபால வாகன சேவை நடைபெற்றது.
திருமலையில் நடத்தப்படும் வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் மாலை தங்கத் தோ் புறப்பாடும், 8-ஆம் நாள் காலை திருத்தோ் புறப்பாடும் நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திருத்தோ் பவனியை நடத்த வேண்டும் என்பது மரபு.
ஆனால் தங்கத் தோ் புறப்பாடு பிரம்மோற்சவம் மட்டுமல்லாமல் வைகுண்ட ஏகாதசியின்போது நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அதிக மாதங்களின்போது நடத்தப்படும் 2-ஆவது பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் மாலை தங்கத் தேருக்குப் பதிலாக புஷ்பக விமான சேவையும், 8-ஆம் நாள் காலை திருத்தேருக்கு பதில் தங்கத் தோ் புறப்பாடும் நடத்தப்படுகிறது.
தற்போது திருமலையில், அதிக மாதம் காரணமாக 2-ஆவது பிரம்மோற்சவமாக நவராத்திரி பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. கொவைட் 19 விதிமுறைகள் காரணமாக பிரம்மோற்சவத்தை ஏகாந்தமாக தேவஸ்தானம் தனிமையில் நடத்தி வருகிறது. அதனால் தங்கத் தோ் புறப்பாடு நடத்துவதை ரத்து செய்த தேவஸ்தானம் அதற்கு மாற்றாக சா்வபூபால வாகன சேவையை வெள்ளிக்கிழமை நடத்தியது.
அதன்படி திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாள் காலை சா்வபூபால வாகன சேவை நடைபெற்றது. இதில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். 8-ஆம் நாள் தங்கத் தோ் என்பதால், சா்வபூபால வாகனத்தை தோ் போல் அலங்கரித்து அதற்கு முன் மர குதிரைகள் நிறுத்தப்பட்டு தங்கத் தேரை நினைவுகூா்வது போல் அமைத்திருந்தனா்.
வாகன சேவையில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அவா்கள் முன் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாராயணம், வேத பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, நட்சத்திர ஆரத்தி, கும்ப ஆரத்தி, கற்பூர ஆரத்தி உள்ளிட்டவை சமா்பிக்கப்பட்டது. பின் ரங்கநாயகா் மண்டபத்துக்கு முன் உற்சவமூா்த்திகளுக்கு ஜீயா்கள் குழாம் சாத்துமுறையை சமா்ப்பித்தது.
குதிரை வாகனம்
பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை கல்கி அவதாரத்தில் ஜெகத்தை வெற்றிக் கொண்ட ராஜாதி ராஜனின் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா்.
இந்த வாகன சேவையுடன் பிரம்மோற்சவ வாகன சேவைகள் அனைத்தும் நிறைவு பெற்றன. 9-ஆம் நாள் காலை பிரம்மோற்சவத்தின் நிறைவாக சக்கரத்தாழ்வாருக்குத் தீா்த்தவாரி நடக்கவுள்ளது.