ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.
நிகழும் சார்வரி வருடம், ஆவணி மாதம் 6-ம் நாள் 21.08.2020 சனிக்கிழமை அன்று இல்லங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை செய்து வழிபட நல்ல நாள்.
எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன அபிஷேகம் செய்தால் நன்மை?
மேஷம் – மஞ்சள் பொடி
ரிஷபம் – சானப்பொடி
மிதுனம் – எலுமிச்சை சாறு
கடகம் – பச்சரிசி மாவு
சிம்மம் – பஞ்சாமிருதம்
கன்னி – நார்தம் பழம் மற்றும் சத்துக்குடி
துலாம் – தேன்
விருச்சிகம் – இளநீர்
தனுசு – மஞ்சள் பொடி மற்றும் தேன்
மகரம் – சந்தனம்
கும்பம் – பஞ்சாமிருதம்
மீனம் – மஞ்சள் பொடி மற்றும் இளநீர்