யாகசாலை பூஜைகள் தொடக்கம்

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாக பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின.
யாகசாலை பூஜைகள் தொடக்கம்

தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாக பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின.
 இக்கோயிலில் பிப். 5-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளதால் இதற்கான விழா யஜமான அனுக்ஞை வைபவத்துடன் ஜன. 27 காலை தொடங்கியது. சனிக்கிழமை மாலை யாக பூஜைகள் தொடங்கின. பின்னர், ஜப ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 2,600 கிலோ மூலிகைப் பொருள்கள்: பெரியகோயிலை ஒட்டியுள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் யாகசாலைக்காக 11,900 சதுரடியில் போடப்பட்டுள்ள தகரப் பந்தலில் 110 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பூஜையில் 400-க்கும் அதிகமான சிவாச்சாரியார்கள், பண்டிதர் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
 5 நாள்கள் நடைபெறும் 8 கால யாக பூஜையில் ஏறத்தாழ 2,600 கிலோ வசம்பு, கருங்காலி, கருடன் கிழங்கு, மிளகுத் தக்காளி, இலுப்பைப் பூ, வலம்புரி, மருதாணி விதை, சாரணை வேர், தாமரைக் கிழங்கு, மாவிளங்கம் பட்டை, அசோகப்பட்டை உள்பட 108 வகையான மூலிகைப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், 1,500 கிலோ மலர்கள் ஸ்ரீரங்கம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. மாலை கட்டும் பணியில் சுமார் 75 பேர் ஈடுபட்டுள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com